இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.

பழைய புகைப்படங்களை பார்க்கும்போது
பழைய நினைவுகள் படம் பிடிக்க தொடங்குகிறது
போட்டோ எடுக்க வருபவர்கள் பதட்டத்துடன்
பல கேள்விகளையும் கொண்டே வருகின்றனர்
பவுடர் சரியாக போட்டிருக்கிறேனா
உடம்பை வளைக்காமல் வைத்திருக்கிறேனா
ஒளி முகத்தில் அடிக்கும் போது
கண்ணை மூடாமல் இருந்தேனா
லைட் என்மீது சரியாக விழுந்திருக்குமா
கறுப்பு துணியை மூடிக்கொண்டிருக்கும்
புகைப்படக்காரன் சரியாக கவனிக்கிறான
பெண்ணாக இருப்பின் இழுத்து
மூடிக் கொண்டுதான் இருக்கிறேனா
என பல கேள்விகளுக்குப் பின் ஒரு
புகைப்படம் பிறக்கிறது......
இப்போது குவிக்கப்பட்டிருக்கும் குப்பையாய்
பல போட்டோக்கள் போனில் இருப்பினும்
ஸ்டுடியோவிலிருந்து வாங்கி
படபடப்புடன் கூடிய ஆர்வத்துடன்
பிரித்து பார்க்கும் போது
என்னைப் போலவே

என் கையிலிருக்கிற நானும்

எழுத்து : Dino LA

0 comments:

Post a Comment

 
Top